கோயம்புத்தூர் 16 February 2019 : கோயம்புத்தூர் வெள்ளக்கிணறு பகுதியில் அமைந்துள்ள லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 20வது பள்ளி ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆறு குட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியின் தாளாளர் திருமதி சித்ரா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி பல்கீஸ் உமா அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.– Nilgiri News























