Ooty 08 October 2018 :உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திங்கட்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் குறைந்து காணப்பட்டன இந்த .நிலையில் மாலை சுமார் 5.30 மணி அளவில் மின்னல் தாக்கியதில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இருந்த பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிய தொடங்கியது . இதனை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பயத்தில் உறைந்து போனார்கள் . மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் ,தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை .–Nilgiri News











