Ooty 23 August 2018 : நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்து கூறியதாவது,
ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் தங்களின் திறமைகளை காலத்திற்கேற்ப ஆர்வத்துடன் வளர்த்து கொள்ள வேண்டும். தமிழக அரசு உங்களுக்காக புதிய தொழில் தொடங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே ஒவ்வொருவரும் திட்டங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். அவ்வாறு செய்தால் நீங்களே ஒரு தொழில் தொடங்கி அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கலாம். படித்து விட்டு அரசாங்க தொழிலையே நம்பாமல் தாங்களாகவே தொழில் தொடங்கி கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் அதன் மூலம் வாழ்வில் முன்னேறி நல்ல நிலைக்கு வர முடியும் எனவும் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இப்பயிற்சி கூட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளில் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன உதவி இயக்குநர் திரு. டேனியல் பிரேம்நாத், கல்லூரி முதல்வர் திரு.ஈஸ்வரமூர்த்தி, அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்- Ooty News











