
Ooty 01 October 2018 : உதகை HPF Main Gate பகுதியில் உள்ள சாலைகளில். சாலையை கடப்பதற்காக நிரந்தர Divider அமைக்கப்பட்டுள்ளன .வாகனங்கள் சாலையில் இருந்து இன்னொரு சாலைக்கு மாறுவதற்காக கட்டப்பட்டுள்ள இந்த இடத்தில் , அதிக அளவில் வாகனங்களை பார்க்கிங் செய்துவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் சிரமத்துடன் செல்கின்றனர் . சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. HPF Main Gate சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களை காவல்துறையினர் கண்டுகொள்வதே இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். பெரிய விபத்து நடக்கும் முன்பே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.– Nilgiri News










