Ooty 08 September 2018:குறு வட்ட அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி நீலகிரி மாவட்டம் கேத்தி பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இறுதிப்போட்டியில் உதகை சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கேத்தி உள்ள நீலகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி மோதின டைபிரேக்கர் மூலம் நீலகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி 6 கோல் அடித்து வெற்றி பெற்றது.பள்ளியின் தாளாளர் திருமதி ரெம பத்மநாபன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி மேரி மெட்டில்டா வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு நந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் .-Nilgiri News












