உதகை அரசு கலைக்கல்லூரியில் இரண்டு உதவி பேராசிரியர்கள் கைது

0
1562
உதகை அரசு கலைக்கல்லூரியின் இரண்டு உதவி பேராசிரியர்கள் கைது

Udhagamandalam 20 January 2019 : நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தாவரவியல் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக  உதவி பேராசிரியராக நாகேந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்   போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்து தெரியவந்தது. இதனை தொடர்ந்து சென்னை கல்லூரி இயக்குனர் உத்தரவின் பேரில் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி இவர்கள் மீது நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா விடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த 16ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று குற்றப்பிரிவு போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.– Nilgiri News

LEAVE A REPLY