அவலாஞ்சி ஏரி நீலகிரி மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது. இந்த ஏரியைச் சுற்றி வளைந்த பாதைகளும், மெக்னொலியாஸ், மல்லிகை, ரோடோண்ட்ரோன்ஸ் போன்ற பூக்கள் பூக்கும் தாவரங்களுடன் இயற்கை சூழ்ந்த சூழலின் உள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த ஏரியை சுற்றி முறுக்கு பாதைகள் வழியாக ஏரி அருகில் பயணிக்கலாம்.ஏரிக்கு சென்று சுற்றுலா பயணிகள் தாங்களே தூண்டில் கொண்டு மீன்பிடித்தலில் ஈடுபடலாம் . ஏரிக்கு அருகில் ஒரு மீன் குஞ்சுப்பொரிப்பகம் நிறுவப்பட்டுள்ளது. பயணிகள் இங்கு மீன்பிடி தூண்டில்கள் மற்றும் மீன் மீன்பிடிக்கத் தேவையான மற்ற மீன்பிடி சாதனங்களைப் பெற முடியும். ஏரிக்கு அருகில் உள்ள இடத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் கூடாரம்போட்டு தங்குகின்றனர். மேலும் சில சுற்றுலாப் பயணிகள் ஏரியின் எதிர்பக்கத்தில் மேகம் தவழும் மலைமீது மலை ஏற்றத்தில் ஈடுபடுகின்றனர். அதாவது அப்பர் பவானி போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் மனித நடமாட்டமற்ற பகுதிகளுக்குச் செல்கின்றனர்.












