கூடலூர் மூன்றாவது மைல் பகுதியில் டிப்பர் லாரி ஆட்டோ மேல் மோதி விபத்துக்குள்ளானது.

0
1088
கூடலூர் மூன்றாவது மயில் பகுதியில் டிப்பர் லாரி ஆட்டோ மேல் மோதி விபத்துக்குள்ளானது.

கூடலூரில் இருந்து கேரளா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரி எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட மூன்று ஆண்களுக்கு காயம் அடைந்தனர். பொதுமக்கள் காயமடைந்தவர்களை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சாலையில் அபாயகரமாக மரங்கள் உள்ளதால் விபத்து ஏற்பட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் – Nilgiri News

LEAVE A REPLY