Thursday, March 12, 2026
இந்தியாவின் பழமை வாய்ந்த மலை தொடருந்துப் பாதைகளில் நீலகிரி மலை தொடருந்துப் பாதையும் ஒன்றாகும். 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் 'நீராவி இயக்கி' பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் கோவை - மேட்டுப்பாளையம் (நீலகிரி கிளைப்பாதை) வரை இருந்த இருப்புப் பாதையானது நீலகிரி வரை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது. இப்பாதை வழியே புகழ் மிக்க நீலகிரி விரைவு ரயில் (Blue mountain...
தொட்டபெட்டா (Doddabetta) தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும். இம்மலையின் உச்சியில் இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும். தொட்டபெட்டா என்ற சொல்லின் மூலம் கன்னடம் ஆகும். கன்னடத்தில் தொட்ட என்றால் பெரிய, பெட்டா என்றால் மலை. எனவே பெரிய...
லாம்ப் பாறை (Lamb's Rock) என்பது தமிழ்நாட்டின் குன்னூரில் உள்ள ஒரு சுற்றுலா தலமாகும்.இது குன்னூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து கோயம்புத்தூர் சமவெளிகள், தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் போன்றவற்றை நன்கு காண இயலும். பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றிய கப்டன் லேம் (Captain Lamb) என்பவரின் நினைவாக இப்பாறைக்கு லேமின் பாறை எனப் பெயர் சூட்டப்பட்டது.
ஊட்டி ஏரி (Ooty lake) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு இல்லம் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரி உதகமண்டலத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாகும். வரலாறு ஊட்டி ஏரி ஜான் சல்லிவன் என்பவரால் 1824 இல் கட்டப்பட்ட ஒரு செயற்கை ஏரி ஆகும்....
டால்பின் மூக்கு (Dolphin's Nose) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தின், குன்னூரில் உள்ள ஒரு காட்சி முனை ஆகும். டால்பின் மூக்கு கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடிக்கு மேலான உயரம் கொண்டது. குன்னூரில் இருந்து 10 கிமீ தொலைவில் கண்கவரும் இடத்தில் உள்ளது. இந்த உச்ச நுனி டால்பின் மூக்கு போல இருப்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு தனிப்பட்ட பெரிய பாறையால் உருவாகியுள்ளது. இந்த...
சிம்ஸ் பூங்கா (Sim's Park) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மலைப்பகுதியில், குன்னூரில் உள்ள ஒரு முதன்மையான சுற்றுலா தலமாகும். இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 1780 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது. குறைந்தபட்சம் 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருக்கும். இந்த தோட்டத்தில் சராசரியாக 150 செ.மீ. மழை பொழிகிறது. இந்த பூங்கா 12 ஹெக்டேர் பரப்பளவில்...
பைக்காரா ஆறு உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும் இந்த ஆற்றின் பைக்காரா அருவி55மீ மற்றும் 61மீ உயரத்திலிருந்து கொட்டும் தொடரருவியாக சுற்றுலாபயணிகளை கவர்கிறது. பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. பைக்காரா நீர்பிடிப்பு பகுதிகளும், சுற்றுலா படகு நிலையங்களும், தோடர் இன பழங்குடியினரின் குடியிருப்புகளும் பைக்காரா அணையைச் சுற்றியுள்ளன. புனல் மின் நிலையம் பிரித்தானியர் ஆட்சியின் போது சர் சி.பி. ராமசாமி ஐயர் முயற்சியால் 1920கள் மற்றும் 1930களில்...
ஊட்டி தாவரவியல் பூங்கா (Ooty Botanical Gardens) தமிழ்நாடு மாநிலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் என்னும் ஊட்டியில் அமைந்துள்ளது. இப்பூங்கா 1847 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 22 எக்டேர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது. இதன் அருகில் தொட்டபெட்டா சிகரம் 2,623 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் ஊட்டி தாவரவியல் பூங்காவின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,250 முதல் 2,500 மீட்டர்கள் வரை இருக்கும். இப்பூங்காவை தமிழ்நாடு...
அவலாஞ்சி ஏரி நீலகிரி மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது. இந்த ஏரியைச் சுற்றி வளைந்த பாதைகளும், மெக்னொலியாஸ், மல்லிகை, ரோடோண்ட்ரோன்ஸ் போன்ற பூக்கள் பூக்கும் தாவரங்களுடன் இயற்கை சூழ்ந்த சூழலின் உள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த ஏரியை சுற்றி முறுக்கு பாதைகள் வழியாக ஏரி அருகில் பயணிக்கலாம்.ஏரிக்கு சென்று சுற்றுலா பயணிகள் தாங்களே தூண்டில் கொண்டு மீன்பிடித்தலில் ஈடுபடலாம் . ஏரிக்கு அருகில் ஒரு மீன்...